Categories
உலக செய்திகள்

ஒரே வாரத்தில் 1,75,000 தடுப்பூசி… கரீபியன் தீவு நாடுகளுக்கு… தடுப்பூசி வழங்கிய இந்தியா.. !!

இந்தியாவிலிருந்து ,கரீபியன் தீவு நாடுகளுக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது .

உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய, கொரோன  நோய் தொற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள சீரம் நிறுவனத்தின்அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியான  கோவாக்ஸின்  ஆகிய  2 தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாது இந்தியா மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசியை ஏற்றுமதி  செய்து வருகிறது. அந்த வகையில் கரீபியன் தீவுப்பகுதியில் சேர்ந்த ஜமைக்கா நாட்டிற்கு  அஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

இந்தியாவின் தடுப்பூசிகள் ஜமைக்கா நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியா கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கரீபிய தீவிலுள்ள நாடுகளானஆன்டிகுவா மற்றும் பார்புடா, செயின்ட் லூசியா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்போன்ற நாடுகளுக்கு சுமார் 1 லட்சத்து 75ஆயிரம்  தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இதுவரையில் இந்தியா 25 நாடுகளுக்கு ,இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியில் வழங்கியுள்ளது. இனிவரும் காலங்களில் 49 நாடுகளுக்கு தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும் என்று வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Categories

Tech |