கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஏரியில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஏரியில் மூழ்கி வெவ்வேறு சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதாச்சலம் அருகே திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த விவேகன், விக்னேஸ்வரன், சர்வேஸ்வரன் ஆகிய மூவரும், அப்பகுதியில் உள்ள ஏரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பண்ருட்டி அருகே ஏறுபுதூரை சேர்ந்த புவனேஸ்வரி, நந்தினி மற்றும் வினோதினி ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக மூவரும் நீரில் மூழ்கி தத்தளித்து உள்ளனர். ஆனால் அவர்கள் வெளியே வர முடியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே நாளில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.