Categories
தேசிய செய்திகள்

ஒரே குழியில் 150 நாய்கள்… ஈவு, இரக்கமின்றி… உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட கொடூரம்…!!!

சிவமொக்கா என்ற வனப்பகுதியின் அருகில் 150 நாய்கள் உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா கம்பதாளா-ஒசூர் அருகே உள்ள தம்மடிஹள்ளி என்ற கிராமத்தில் ஏராளமான தெரு நாய்கள் இருந்தது. இது கிராமத்திற்குள் யாராவது புதிதாக வந்தால் குரைப்பது வழக்கம். நாய் குறைத்தால் யாரோ புதிதாக கிராமத்திற்குள் வருகிறார்கள் என்று தெரிந்து விடும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தம்மடிஹள்ளி கிராமத்தில் மைசூரு காகிதத் தொழிற்சாலைக்கு வெளியூரைச் சேர்ந்த பெண்கள் சிலர் வேலைக்கு வந்தனர். அவர்களைப் பார்த்து நாய்கள் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது. பின்னர் சிறிது நேரத்தில் சத்தம் நின்றுவிட்டது. அதன் பிறகு நாய்கள் தொடர்ந்து மாயமாக ஆரம்பித்தது.

சில நாட்கள் கழித்து வனப்பகுதியில் நாய்கள் இறந்து கிடந்ததாக சிலர் தெரிவித்தனர். பின்னர் கிராமத்தை சேர்ந்த சிலர் வனப்பகுதிக்கு சென்று பார்த்தபோது ஒரு குழி தோண்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்று பார்த்தபோது 150க்கும் மேற்பட்ட நாய்கள் உயிரிழந்து கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக பத்ராவதி புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். நாய்களை யார் கொன்று இருப்பார்கள் என்பது பற்றி தெரியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருக்களில் சுற்றி திரியும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்வதற்கு சிலர் முகாம் அமைத்து இருந்தனர்.

அவர்கள் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் உயிருடன் புதைத்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் கிராம பஞ்சாயத்து ஊழியர்களை விஷம் கொடுத்து நாய்களை கொன்று புதைத்து இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. ஈவு இரக்கமில்லாமல் நாய்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சிவமொக்கா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |