Categories
தேசிய செய்திகள்

“ஒரே இளைஞரை காதலித்த 2 பெண்கள்”…. வாக்குவாதத்தால் நேர்ந்த விபரீதம்…. சோக சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் ராணிபுரா பகுதியை சேர்ந்த லியோட் டிசோசா (29) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்விதா (22) என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களது காதலுக்கு குறுக்கே டாக்லின் என்ற மற்றொரு பெண் நுழைந்துள்ளார் . டாக்லினும் லியோ டிசோசாவை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மங்களூரு சோமேஸ்வரா கடற்கரைப் பகுதியில் லியோ டிசோசா மற்றும் அவரது காதலி அஸ்விதா மற்றும் டாக்லின் ஆகிய மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தனது எட்டு வருடக் காதலை பிரிக்கக்கூடாது என்று வாக்குவாதம் செய்து அஸ்விதா கடலில் குதித்துள்ளார். அவரைக் காப்பாற்ற காதலன் லியோ டிசோசா குதித்தார்.

அஸ்விதாவை உயிருடன் மீட்ட பின் லியோ டிசோசா மயக்கத்தில் இருந்துள்ளார்.
அவர்கள் இருவரையும் அங்குள்ள நபர்களின் உதவியோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் டாக்லின். ஆனால் வழியிலேயே லீயோ டிசோசா உயிரிழந்தார். அஸ்விதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக உல்லால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |