சென்னையில் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீதான நடவடிக்கையையும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தையும் சுட்டிக் காட்டினால் அதை பிராமண சமுதாயத்திற்கு எதிரான விவகாரமாக திசை திருப்புகிறது ஒரு கூட்டம். மறுபக்கம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ராஜகோபால் மீது தொடர்ச்சியான புகார்கள் மற்றும் வாட்ஸ்அப் சட்டிங், ஸ்க்ரீன் ஷாட் ஆகியவை வந்த வண்ணம் உள்ளன. இதில் சில ஆசிரியர்களின் வேதனையும் உள்ளடங்கியுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளி பாலியல் புகாரை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் புகார் தெரிவிக்கலாம் என்று துணை கமிஷனர் ஜெயலட்சுமி தனது செல்போன் (9444772222) எண்ணை வெளியிட்டார். கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுவதும் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுவரை 100 பேர் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.