ஆவடி அருகே குழந்தை இல்லை என்ற காரணத்தால் மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராம் அணைக்கட்டுசேரியை சேர்ந்த கார்த்திக் (26) என்பவருக்கு தேவி (24) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகின்றன. இவர்களுக்கு குழந்தை இல்லை என்ற காரணத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் கணவன் -மனைவி இடையை சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த தேவி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தேவிக்கு திருமணமாகி ஒருவருடமே ஆகியிருப்பதன் காரணமாக திருவள்ளூர் ஆர்டிஓவும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.