Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு வசதியும் முறையா செய்யல…. ஆத்திரமடைந்த பொதுமக்கள்…. திடீர் மறியலால் பரபரப்பு….!!

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, சாக்கடை கால்வாய் போன்ற வசதிகள் எதுவுமே முறையாக செய்து கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் பல்வேறு முறை நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், இதுவரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு அல்லிநகரம் எஸ்.என்.ஆர்.ஜன்ஷன் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அல்லிநகரம் போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்த பின்னரே பொதுமகள் அங்கிருந்து களைந்து சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |