Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பிஎப்-7 எதிரொலி!…. சீனாவில் இருப்பது போல் இந்தியாவில் நிலைமை மாறாது…. நிபுணர்கள் நம்பிக்கை…..!!!!

தற்போது சீன நாட்டில் கொரோனா வைரஸ் திடீரென்று எழுச்சி பெற்று பரவி வருகிறது. அதற்கு காரணம் என்னவெனில் ஒமைக்ரானின் பிஎப்-7 துணை வைரஸ்கள் தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்று தான் என கூறப்படுகிறது. மேலும் இது அதிவேகமாக பரவுகிற தன்மையை கொண்டு உ ள்ளது. இந்த வைரஸ் சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளிலும் பரவிவிட்டது.

இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்து விட்டது. இந்தியாவில் நேற்று வரை 3 நபர்களை இந்த வைரஸ் பாதித்திருப்பதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், தற்போது 4 ஆக உயர்ந்துள்ளது. வர இருக்கும் மாதங்களில் சீனாவில் இந்த வைரசால் லட்சகணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என கணிக்கிடபட்டுள்ளது. இதற்கிடையில் சீனாவில் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், இந்தியாவின் நிலைமை அவ்வாறு இன்றி வேறுபட்டதாக இருக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

Categories

Tech |