Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. ஜனவரி 2 வரை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மத்திய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேவைப்பட்டால் ஊரடங்கு பிறப்பித்தது கொள்ளலாம் என்று அறிவுறுத்தி உள்ளது.இந்நிலையில் கேரளா மாநிலத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற 30ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது இதுகுறித்து அந்த மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வருகின்ற 30ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை ந இரவு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

அதன்படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். அதனை தொடர்ந்து மருந்தகம் உள்ளிட்ட கடைகள் தவிர மற்ற கடைகள் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். மேலும் தேவையில்லாமல் பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த இரவு ஊரடங்கு மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கக் கூடிய வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |