Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. இன்று முதல் அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து மாநில அரசுகளும் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு அமல் படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவாவில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது இந்த ஊரடங்கு இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |