Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. இன்று முதல் அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தென்னாபிரிக்காவின் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லியில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தபடும் என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த இரவு ஊரடங்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விதிக்கப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 290 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தேசிய தலைநகரில் புத்தாண்டு கூட்டங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கு முன்பு கொரோனா பரவும் பகுதிகளை கண்டறிய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

Categories

Tech |