ஒமைக்ரான் ஊரடங்கு தொடர்பாக வரும் 31-ம் தேதி ஆலோசனை நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் உள்ள அறையை ஆய்வு செய்த மா சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “சித்தா, ஆயுர்வேததுடன் கூடிய 1,542 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அறிவதற்கு டேட்டா செல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இரவு நேர ஊரடங்கு போடலாமா? வேண்டாமா? என்பது குறித்து டிசம்பர் 31-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.