புயலால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை விடுவதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயலால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது என்று தமிழக பள்ளி, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.