Categories
தேசிய செய்திகள்

ஐயோ காப்பாற்றுங்கள்… ரயில் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்டு… கதறிய மூதாட்டி… உரிய நேரத்தில் உதவிய பயணிகள்…!!!

ஆந்திரா அருகே ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கிய மூதாட்டியால் பரபரப்பு. பயணிகள் உதவியதால் உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் பால்கர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் காக்கிநாடா சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில் ஏற ஹைதராபாத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் முயன்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே சிக்கியுள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனை தொடர்ந்து மூதாட்டியை மீட்டு எடுத்தனர். துரிதமாக செயல்பட்டதால் சிறு காயங்களுடன் மூதாட்டி உயிர் பிழைத்தார். மேலும் அவர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சைக்கு உட்படுத்தி பின்னர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Categories

Tech |