நாக்பூரில் வசிப்பவர் வினோத். 42 வயதான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதால் இவருடைய மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரத்தில் இருந்த வினோத் தன்னுடைய மனைவிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்வது போல நாடகம் நடத்தப் போவதாக குழந்தைகளிடம் கூறிவிட்டு பிறகு உண்மையிலேயே தன்னுடைய மூத்த மகளை கொன்றுள்ளார்.
பின்னர் அதனை தன்னுடைய இளைய மகளை வைத்து புகைப்படமும் எடுத்துள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.