Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஐயோ எனக்கு வாழ பிடிக்கல ….. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானோஜிப்பட்டி பகுதியில் எலக்ட்ரீசியனான கேசவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கேசவன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோய் குணமாகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த கேசவன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கேசவனின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |