Categories
மாநில செய்திகள்

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரும் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தூத்துக்குடி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மீன்வளத்துறை மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த சமீரன் ஐஏஎஸ் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படுகிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு வாரியம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குனராக இருந்த விஷ்ணு நெல்லை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படுகிறார்.

மேலும் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டி என் மனம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தினேஷ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளராக இருந்த புஷ்பராஜ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட ஆட்சியராக இருக்கின்ற பிரபாகர் சுகாதாரத்துறை இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |