ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த வருடம் பெரிதாக எந்த ஒரு கிரிக்கெட்டிலும் பார்க்க வாய்ப்பு இல்லாத சூழலில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என்ற ஒரு செய்திகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் செப்டம்பர் மாதத்தில் எந்த தேதியில் நடைபெறும் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வராமல் இருந்தது. தற்போது ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் 19-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் 50 நாட்களுக்கும் அதிகமாக நடைபெறும். நவம்பர் 8ஆம் தேதி இறுதி போட்டிகள் நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடத்த முடியாத ஒரு சூழல் இருக்கும் காரணத்தினால் 2014ல் எப்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்ததோ அதே போல் இந்த முறையும் நடக்கும் என்று சொல்லியுள்ளார்கள்.
அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட் நடப்பதால் 3 சர்வதேச மைதானங்களுக்கு தற்போது பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது. மிக விரைவிலேயே எந்த அணிகள் எந்த அணியோடு மோதும் என்ற கால அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.