இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தை ஒரு சிலர் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் விவசாயம் இல்லாவிட்டால் நம்மால் சாப்பிட முடியாது என்று சிலருக்கு தெரிவதில்லை. சிறந்த முறையில் விவசாயம் செய்தால் அதிலும் நல்ல லாபத்தை பெறலாம். தற்போது ஐடி துறையில் பணிபுரியும் ஒரு சில விவசாயத்தில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஜா ரெட்டி(26) என்ற இளம்பெண், தனது ஐடி வேலை விட்டுவிட்டு, விவசாயம் செய்து வருகிறார்.
தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியுடன் காய்கறிகள், பழங்களை பயிரிட்டு கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார். ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறிகள் மற்றும் பழங்களை சாகுபடி செய்து, அவற்றை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்கிறார். ஐடி வேலையை விட்டுவிட்டு வந்த இவர், தற்போது வெற்றிகரமான விவசாயியாக மாறியுள்ளார்.