அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8 ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைகள் 12 மணி நேரம் அடைக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது பற்றி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நடப்பாண்டில் அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணம் என்பதனால் ஏழுமலையான் கோவில் கதவுகள் இரண்டு நாட்களிலும் 12 மணி நேரம் மூடப்பட இருக்கின்றது.
அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ இருக்கின்றது. இதனால் அன்று காலை 8.11 மணி முதல் 7.30 மணி வரை கதவுகள் அடைக்கப்பட்டு ஆகம விதிகளின்படி பூஜை செய்யப்பட்டு பின் மீண்டும் கதவுகள் திறக்கப்படும். அதேபோல நவம்பர் எட்டாம் தேதி மதியம் 2.39 முதல் 6.19 வரை சந்திர கிரகணம் என்ற காரணத்தினால் கோவில் கதவுகள் காலை 8.40 முதல் 7.20 வரை மூடப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்னரே நடை திறக்கப்படும். இந்த இரண்டு நாட்களில் விஐபி தரிசனம் 300 ரூபாய் சிறப்பு தரிசனம் கல்யாண உற்சவம் சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை, பிரம்மோற்சவம் உள்ளிட்ட அஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. இந்த இரண்டு நாட்களும் வைகுண்ட வளாகம் வழியாக கதவுகள் திறக்கப்பட்டு இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டிருக்கிறது.