திருப்பதியில் 10,000 இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ஆம் தேதி இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் முதன்மை தலைமை செயலாளர் அலுவலர் சேகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான இலவச தரிசனதிற்கு 300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட்டுக்கள் பிப்ரவரி 15ஆம் தேதி வரை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 16ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு கூடுதலாக 10,000 தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அலிபிரி பேருந்து நிலையம் அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் , ஸ்ரீனிவாசன் பக்தர்கள் தங்கும் ஓய்வறை, கோவிந்தராஜ சுவாமி 2&3 சத்திர கவுண்டர்களில் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது.