Categories
மாநில செய்திகள்

ஏற்றுமதி தொழில் பண்ண விரும்புபவர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் குறித்த இணைய வழி கருத்தரங்கை நடத்துகின்றது. அக்டோபர் 31 மதியம் 2.30 மணிக்கு தொடங்கி நாள் தோறும் மூன்று மணி நேரம் என மூன்று நாட்களுக்கு கருத்தரங்கம் நடக்கிறது.சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்டோர், பணியில் உள்ள தொழில் ஆா்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண், பெண் என அனைவரும் இப்பயிற்சி கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |