ஏர்போர்ட்டுக்கு செல்வதாக இணையத்தில் மனோபாலா பகிர்ந்ததை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மனோபாலா தமிழ் சினிமா உலகில் இயக்குனர், தயாரிப்பாளர், யூடிபர், நகைச்சுவை நடிகர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் ஆகாயகங்கை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் பிள்ளை நிலா, சிறைபறவை, ஊர்க்காவலன் ,என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், வெற்றிப்படிகள், கருப்பு வெள்ளை, பாரம்பரியம் உள்ளிட்ட பல திரைப் படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது தொடர்களிலும் நடித்து வருகின்றார். சமூகவலைத்தளங்களில் அவ்வபோது தனது படங்கள் குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பகிர்ந்து வரும் மனோபாலா நேற்று கோவை ஏர்போர்ட்டுக்கு செல்வதாக பதிவிட்டுள்ளார். அத்துடன் ஏர்போர்ட்டில் தான் தனியாக உட்கார்ந்து இருக்கும் போட்டோவை பகிர்ந்திருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்களோ என்ன மச்சான் தனியா உட்கார்ந்து இருக்கே…, “ஆடி மாசம் பறந்து போயிருக்கலாம் பிளைட் வேண்டாம்” என அவரை பங்கம் செய்து வருகின்றனர்.