Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஏரியில் மரங்கள் திடீர் தீ”… பெரும் பரபரப்பு…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!!!!

விருதாச்சலம் அருகே ஏரியில் இருந்த மரங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதாச்சலம் அடுத்த மங்கலம் பேட்டை அருகே பள்ளிப்பட்டு ஊராட்சியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று அமைந்திருக்கிறது. இந்த ஏரியில் விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஏரியில் இருந்த விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்துள்ளது.

இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்துள்ளது. இது பற்றி தகவலின் பெயரில் மங்கலம் பேட்டை தீயணைப்பு வீரர்கள்  விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்துள்ளனர். இருந்த போதிலும் தீ விபத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த விழல்கள் மற்றும் கருவேல மரங்கள் எரிந்து  சாம்பலாகி உள்ளது. தீ விபத்திற்கான காரணம் பற்றி மங்கலம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |