தொழிலாளி கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டையில் செல்லம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலைகளில் பழைய பேப்பர்களை சேகரித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒழுகூர் ஏரிக்கரையில் நடந்து சென்ற போது செல்வம் எதிர்பாராதவிதமாக கால் தவறி கரையிலிருந்து பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்துவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வத்தின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.