Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏரிக்கரையில் கிடந்த சடலம்…. வாலிபர்களின் கொடூர செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பெயிண்டரை குத்தி கொலை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் பெயிண்டரான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் புழல் ஏரிக்கரை அருகில் 3 மர்ம நபர்கள் ஏழுமலையை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏழுமலையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்தராஜ், புவிலன், ரபீக் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2019-ஆம் ஆண்டு ஆனந்தராஜின் அண்ணனான கார்த்திக் என்பவர் வண்ணாரப்பேட்டையில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு ஏழுமலை மூலகாரணமாக இருந்துள்ளார். எனவே ஏழுமலையை பழிவாங்கும் விதமாக ஆனந்தராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Categories

Tech |