அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் போன்றோர் ஏப்ரல் 23ஆம் தேதி உக்ரைனைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தொடர்ந்து 2 மாதங்கள் முடிவடைகிறது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கியது. இதன்படி ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், 26-ந் தேதி மாஸ்கோ செல்ல இருக்கிறார். அதனைதொடர்ந்து அவர் அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சு வார்த்தை நடத்துகின்றார்.
அதைத்தொடர்ந்து அவர் உக்ரைன் சென்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியையும் சந்திக்கிறார். இந்த சந்திப்புகளின்போது, போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் போன்றோர் ஏப்ரல் 24ம் தேதி உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.