Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் வாடகை செலுத்த வில்லை?…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!

வாடகை பணம் செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமாக  பல கடைகள் உள்ளது. இந்த கடைகளை வியாபாரிகள்  வாடகைக்கு எடுத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 20 கடைகள் 6 கோடி  ரூபாய் வாடகையை பாக்கி வைத்துள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் பலமுறை வாடகை செலுத்துமாறு கடையின் உரிமையாளர்களிடம்  அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் கடையின் உரிமையாளர்கள் வாடகை செலுத்த வில்லை. இதனால் நேற்று நகராட்சி அதிகாரிகள் 20 கடைகளையும் பூட்டி  சீல் வைத்துள்ளனர்.மேலும் இதுபோன்று கடை வாடகை செலுத்தாத உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |