பா ஜனதா சார்பில் மக்களவை சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்காக தெலுங்கானா மாநிலம் ஜாகிராபத் மக்களவைத் தொகுதியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். தொகுதியில் அடங்கிய கமாரெட்டி மாவட்டம் பர்கூர் எனும் இடத்தில் ஒரு ரேஷன் கடைக்கு அவர் சென்றிருந்தபோது அங்கு பிரதமர் மோடி புகைப்படம் இல்லாததை கண்டு கோபம் அடைந்துள்ளார். தன்னுடன் வந்த மாவட்ட கலெக்டர் ஜித்தேஷ் பட்டீலிடம் அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார். கலெக்டர் இடம் அவர் பேசியபோது வெள்ளிச்சந்தையில் கிலோ 35 ரூபாய்க்கு விற்கும் அரிசி இங்கு ஒரு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதில் போக்குவரத்து செலவு, சேமித்து வைக்கும் செலவு போன்ற செலவுகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்கின்றது. 35 ரூபாய் மதிப்புள்ள அரசியல் மத்திய அரசின் பங்கு எவ்வளவு மாநில அரசின் பங்கு எவ்வளவு என தெரியுமா என்று அவர் கேட்டதற்கு கலெக்டர் பதில் தெரியாமல் அமைதியாக இருந்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் இந்த கேள்விக்கு நன்றாக சிந்தித்து 30 நிமிடத்திற்குள் பதிலுடன் வாருங்கள். நான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிப்பதற்கு முன்பு வந்து விடுங்கள். அப்போதுதான் எனது கேள்விகளுக்கு கலெக்டரால் கூட பதில் சொல்ல முடியவில்லை, போராடி த்தான் தகவல் திரட்டினார் என பத்திரிகையாளர்களிடம் கூற முடியும். மேலும் கடந்து 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு பயனாளிகளுக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை மத்திய அரசு இலவசமாக வழங்க வருகின்றது. தற்போது 35 ரூபாய் அரிசியில் சுமார் 30 ரூபாயை மத்திய அரசும் நான்கு ரூபாய் மாநில அரசும் ஏற்றுக்கொள்கின்றது. அப்படிப்பட்ட சூழலில் ரேஷன் கடையில் பிரதமர் மோடி புகைப்படத்தை ஏன் வைக்கவில்லை.
பாஜக தொண்டர்கள் பிரதமர் படத்தை வைக்க வந்த போது அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. நான் இப்போது செல்கின்றேன் எனது ஆட்கள் வந்து பிரதமரின் பேனரை வைப்பார்கள் மாவட்ட நிர்வாகி என்னும் முறையில் அது அகற்றப்பட்டாலும், கிழிக்கப்பட்டாலும் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இங்கு பேனர் இல்லாவிட்டால் நான் மீண்டும் வருவேன் என கலெக்டர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன் பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டத்திற்கு கடந்த 8 வருடங்களில் 5 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்கிறது. அதில் 20% 2020 – 21 ஆம் நிதி ஆண்டில் கொரோனா காலத்தில் செலவழிக்கப்பட்டது. மேலும் கடந்த 8 வருடங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் தெலுங்கானாவிற்கு 20,000 கோடி வழங்கப்பட்டது என அவர் கூறியுள்ளார்.