Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடம்… அமைச்சர் விஜயபாஸ்கர்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ஆம் தேதி அன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், தான் நலமாக இருப்பதாக வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார். கடந்த 12ஆம் தேதி இரவில் இருந்து அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. அதனால் அவர் விரைவில் குணம் பெற வேண்டி திரையுலகினர் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அதனைப்போலவே வசந்தகுமார் எம்பி-க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்ல கண்ணனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஐந்து நாட்கள் சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |