Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

எஸ்.பி.பியின் உடல்நிலை சீராக உள்ளது… மருத்துவமனை நிர்வாகம் தகவல்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பியின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த ஐந்தாம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை கூறியிருந்தது. அதனால் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்தனர். அது மட்டுமன்றி அவர் விரைவில் குணமடைய வேண்டி திரையுலக பிரபலங்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அவரின் உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். வெண்டிலேட்டர் மூலமாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவரின் உடல்நிலையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் விரைவில் அவர் குணமடைந்து விடுவார் என நாங்கள் நம்புகிறோம்” என்று கூறியுள்ளது.

Categories

Tech |