Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக 75 அடி நீள தேசியக்கொடி…. அணிவகுத்து ஊர்வலமாக சென்ற நிர்வாகிகள்…..!!!!

நேற்று 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கோவை உக்கடம் ஜி.எம்.நகரில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அக்கட்சி நிர்வாகிகள் 75 அடி நீள தேசியக்கொடியுடன் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர்.

இந்நிலையில் அவர்கள் சுதந்திர தினத்தை போற்றும் அடிப்படையில் முழக்கமிட்டனர். இவற்றில் கவுன்சிலர் அலிமாராஜா, மண்டல தலைவர் ராஜா உசைன், மாவட்ட தலைவர் முஸ்தபா, வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம், விமன் இந்தியா முவ்மென்ட் மாவட்ட தலைவர் காமிலா உட்பட பலர் பங்கேற்றனர்.

Categories

Tech |