Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 100% தள்ளுபடி…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போது sbi வங்கி வீட்டுக் கடன்களுக்கான பிராசசிங் கட்டணத்தை 50 முதல் 100 சதவீதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

எஸ்பிஐ வங்கியின் வீட்டுக் கடன்கள் மட்டும் வீடு சார்ந்த கடன்களுக்கு பிராசசிங் கட்டணம் 50 சதவீதம் தள்ளுபடி.வேறு வங்கியில் இருந்து எஸ்பிஐ வங்கிக்கு வீட்டுக் கடன் டேக் ஓவர் செய்ய ப்ராசசிங் கட்டணம் நூறு சதவீதம் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக கடன் தொகையில் 0.35% தொகையை ப்ராசஸின் கட்டணமாக வசூல் செய்கிறது.

அது மட்டுமல்லாமல் குறைந்தபட்சம் ஜிஎஸ்டி தொகையாக 2000 ரூபாய் மற்றும் அதிகபட்சம் ஜிஎஸ்டி தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை சலுகை காலத்தில் பிராசசிங் கட்டணம் 50 முதல் 100% தள்ளுபடி செய்யப்படுவதால் வீட்டுக் கடன் வாங்குவோரும் டேக் ஓவர் செய்யும் போதும் நிறைய பணத்தை சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |