Categories
தேசிய செய்திகள்

“எஸ்ஐ தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு”…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காவல் சார்பு பணியாளர் பணிக்கான தேர்வு வருகிற ஜூன் 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வில் பங்கேற்க சிவகங்கை மாவட்டத்தில் 4360 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். தேர்விற்காக காரைக்குடியில் ஐந்து இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் அங்கு தேர்வு எழுதும் 20 நபர்களுக்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள தேர்வு மையங்களில் மாவட்ட கண்காணிப்பாளர் பார்வையிட்டுள்ளார். தேர்வு எழுத வருபவர்கள் கறுப்புநிற பந்து முனை பேனா கொண்டு வரவேண்டும். எலக்ட்ரிக் சாதனங்கள், ப்ளூடூத், கால்குலேட்டர், கைக்கடிகாரங்கள் போன்றவை கொண்டு வரக்கூடாது. விண்ணப்பித்த தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு 8:30 மணிக்கு வர வேண்டும். மேலும் காலை 9.50 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்க இயலாது. இந்த தேர்வு எழுத விண்ணப்பித்த நபர்கள் தங்களது நுழைவு சீட்டு இணைய தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் நுழைவு சீட்டில் தவறுகள் ஏதும் இருந்தால் தேர்வு எழுத விண்ணப்பித்த போது கொடுத்த புகைப்படத்துடன் ஏதாவது ஒரு அடையாள அட்டை கொண்டு வந்தால் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுகிறார். வருகிற ஜூன் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை பொது அறிவு தேர்வு நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி முதல் 5 மணி வரை தமிழ் தகுதி தேர்வு நடைபெற இருக்கிறது. வழக்கமாக சார்பு ஆய்வாளர் தேர்வில் பொதுத்தேர்விற்கு 70 மதிப்பெண்களுடன், உடல் தகுதி தேர்வு 15 மதிப்பெண்கள், சான்றிதழுக்கு 5 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இந்த முறை புதிதாக தமிழ் தகுதித்தேர்வு தனியாக நடத்தப்படுகின்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சார்பு ஆய்வாளர் பணிக்கு தகுதி பெற உள்ளவர்களாக கருதப்படுகின்றார். இதுதவிர தமிழ் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே பொதுஅறிவு தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்த எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |