Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. உரிய ஆவணம் இல்லாததால் ரூபாய் 64,000 பறிமுதல்…. கெடுபிடியான வாகன தணிக்கை….!!

மதுரையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் ரூபாய் 64,000 பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல்குழு தேர்தல் விதிமுறைகளையும், நடத்தைகளையும் அமலுக்கு கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமளிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், கண்காணிப்பு நிலை குழுவினரையும் நியமித்துள்ளனர். அந்த வகையில் தேர்தல் நெருங்குவதால் பறக்கும் படையினர்கள் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் மதுரை மாவட்டம் மேலூரிலும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக, சருகுவலையபட்டியில் வசித்து வரும் மணி சேகரன் என்பவர் மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் 64,000 கொண்டுவந்தது சோதனையில் தெரியவந்தது. இதனை பறக்கும் படைகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |