காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை வனப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் நல்ல னகாத்து எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையின் கதவை உடைத்து சேதப்படுத்தியது.
அதன்பிறகு காட்டு யானைகள் ரேஷன் அரிசியை எடுத்து தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியுள்ளது. இந்த காட்டு யானைகள் அருகில் இருக்கும் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.