Categories
உலக செய்திகள்

எல்லைப் பிரச்சனைகளுக்கு இவ்வாறுதான் தீர்வு காணமுடியும்….!! நேபாளம் அதிரடி….!!

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனைக்கு ஏற்கனவே உள்ள வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்படும் என நேபாள பிரதமர் சேர் பகதூர் தேவுபா கூறியுள்ளார். மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு விவகாரங்கள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்த பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் நாடு திரும்பினார். இந்த பயணத்தில் நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் நாராயண் கட்டாவும் உடன் வந்திருந்தார்.

அவர் நேபாள நாட்டின் தலைநகரில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது, “நேபாளம் மற்றும் இந்தியா இடையேயான எல்லைப் பிரச்சினைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். எல்லை பிரச்சனைக்கு ராஜ்ய ரீதியாகவும் ஏற்கனவே உள்ள வழிமுறைகள் மூலமாகவும் தீர்வு காணப்படும் இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |