Categories
மாநில செய்திகள்

எல்லாமே இலவசம் தான்…. கால்நடை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்களுக்கு ரூ.8 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது.

2021 -22ம் ஆண்டில் 388 கிராம பஞ்சாயத்து ஒன்றியங்களில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் மொத்தமாக 7,760 சிறப்பு முகாம்கள் நடத்த ரூ.7.76 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

இதில் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழு நீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை கருவூட்டுதல் போன்றவை இலவசமாக மேற்கொள்ளப்படும் என்றும் சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு இந்த முகாமின் போது விருது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |