சட்ட விரோதமாக கஞ்சா கடத்திய மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பிரிவு சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது எருமை மாடுகளை ஏற்றி வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 2 வெள்ளை சாக்குகளில் 42 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சரக்கு வேன் ஓட்டுநர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதம் என்பதும், அவருடன் இருந்தவர்கள் கரண்குமார், ராம்குமார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 21 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.