Categories
தேனி மாவட்ட செய்திகள்

எரிந்த நிலையில் கிடந்த பிணம்…. கொலையாளிகளுக்கு வலைவீச்சு…. தேனியில் பரபரப்பு….!!

தொழிலாளியை கொலை செய்து எரித்துவிட்டு குப்பைத்தொட்டியில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள எ. காமாட்சிபுரம் பகுதியிலுள்ள குப்பைத் தொட்டியில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக பெரியகுளம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துணை சூப்பிரண்டு முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் குப்பைத் தொட்டியில்  கிடந்த பிணத்தை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் எ காமாட்சிபுரத்தை சேர்ந்த செல்வம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கூலி தொழிலாளியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வத்தை கொலை செய்ததற்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |