Categories
மாவட்ட செய்திகள்

எம்பி திருநாவுக்கரசின் ஆதரவாளர்கள்…. திடீரென பிரேக் போட்ட கார்…. அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்து….!!

சிவகங்கை அருகே திருநாவுக்கரசர் எம்.பி.யுடன் வந்தவர்கள் கார்கள் மோதி கொண்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக திருநாவுக்கரசர் எம் .பி தன்னுடைய காரில் வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் காரில் வந்தனர். அப்போது சிவகங்கை அருகே வரும்போது திருநாவுக்கரசரின் காரை பின் தொடர்ந்து வந்த கார் ஒன்று திடீரென்று பிரேக் போட்டது. இதனால் இதனை தொடர்ந்து வந்த இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். அதன் பின்னர் சேதமடைந்த காரை ரோட்டோரத்தில் விட்டுவிட்டு மற்ற கார்களில் அஞ்சலி செலுத்த சென்றுள்ளனர்.

Categories

Tech |