பட்டியலினத்தவர்கள் பற்றி அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் இரண்டாவது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திரைப்படத் துறையில் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றம் குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறு கருத்து தெரிவித்த நடிகை மீரா மிதுன் மீது விசிக கட்சி சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மீரா மிதுனியின் வழக்கறிஞர் ஆஜராகாத நிலையில் அவருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஒருமுறை பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.