கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்.
தமிழ் தெலுங்கு என பல மொழி படங்களிலும் ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு கடந்த 11ஆம் தேதி லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
'Negative' can mean a positive thing these days. Grateful for all your love and prayers, hope you had a lovely Pongal and Sankaranthi! 🤗❤️ pic.twitter.com/Sop5wPfBA1
— Keerthy Suresh (@KeerthyOfficial) January 18, 2022
தனது வலைதள பக்கத்தில் ரசிகர்களின் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நன்றி என கூறியுள்ளார். தொடர்ந்து தான் எடுத்துக்கொண்ட செல்பி ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலர் “ஏன் இவ்வளவு டல்லா ஆயிட்டீங்க….?? ரொம்ப மெலிஞ்சிடங்களே….!”என கேட்டுள்ளனர். மேலும் பலர் வாழ்த்துக்கள் கூறிய கீர்த்தி சுரேஷுக்கு ஆதரவாகப் பேசி உள்ளனர்.