Categories
தேசிய செய்திகள்

என் மனைவி கூட எனக்கு…. இவ்வளவு காதல் கடிதம் எழுதவில்லை…. கெஜ்ரிவால் வேதனை…!!!

என் மனைவி கூட எனக்கு இவ்வளவு காதல் கடிதம் எழுதவில்லை என டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், “ஒவ்வொரு நாளும் துணை நிலை ஆளுநர் என்னை எவ்வளவோ திட்டி கொண்டே இருக்கிறார். துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா என்னை தினமும் திட்டும் அளவுக்கு என் மனைவி கூட என்னை திட்டியதில்லை.

கடந்த 6 மாதங்களில் ஆ ளுநர் எழுதியது போன்று, என் மனைவி கூட எனக்கு இவ்வளவு காதல் கடிதங்களை எழுதியதில்லை. ஆளுநரே, சற்று நிதானமடையுங்கள். உங்கள் தலைவரையும் நிதானமாக இருக்கும்படி கூறுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |