Categories
தேனி மாவட்ட செய்திகள்

“என் மகனையும் மருமகளையும் சேர்த்து வைங்க” ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. தேனியில் பரபரப்பு….!!!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த  கோகிலாபுரம் கிராமத்தை சேர்ந்த அல்போன்ஸ் என்பவர் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவரை   தடுத்து நிறுத்தியுள்ளனர்.  இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவரது  மகனும், மருமகளும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

அவர்களை சேர்த்து வைக்க கோரி அல்போன்ஸ்   உத்தமபாளையம் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்த  அல்போன்ஸ் தீக்குளித்து தற்கொலை செய்ய  முயன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அல்போன்சை  மீட்டு மகளிர் காவல் நிலையத்திற்கு  விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |