அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு இன்று சென்று அந்த நாட்டு அதிபர் சை இங்- வெண்ணெ சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருக்கிறது. எனினும் இதற்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தைவான் பகுதிகளுக்கு இடையேயான எந்த வடிவிலான அலுவலக தொடர்புக்கு சீனா பல தருணங்களில் கடுமையான தனது எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறது. இதனால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே உறவில் சமீப மாதங்களாக பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தைவானின் ஜல சந்தியின் இரு பக்கமும் சீனாவுடன் ஒன்றிணைந்தது என வலியுறுத்தி வருவதுடன் தைவான் தனி நாடாக செல்வதற்கான பிரிவினை செயலுக்கு சீனா கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றது.
ஒரே சீனா கொள்கைக்கு அமெரிக்கா உட்பட வேண்டும் எனவும் அதுவே சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவின் அரசியல் அடித்தளமாகவும் இருக்கும் என சீனா தெரிவித்து வருகின்றது. மேலும் சீனா உள்நாட்டு போரில் தனி நாடாக பிரிந்து தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜம்பிங் தலைமையிலான சீன அரசு தெரிவித்து வருகிறது. இது பற்றி சீன வெளியுறவுத்துறை செய்து தொடர்பாக பேசும்போது, தைவான் சீன பிராந்தியத்திலிருந்து பிரிக்க முடியாத ஒரு பகுதியாகவும் தைவான் விவகாரம் முற்றிலுமாக சீனாவில் உள் விவகாரம். சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு விவகாரத்தில் எந்த சமரசத்திற்கும் சலுகை இடம் கிடையாது. தேசிய இறையாண்மையை பாதுகாக்க சீனா மக்கள் கொண்டுள்ள உறுதிதன்மையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் தன் ஆட்சி பிராந்தியமாக உள்ள தைவானை நாங்கள் ஒருபோதும் கட்டுப்படுத்தியதில்லை. நிச்சயமாக ஒரு நாள் அதனை கைப்பற்றுவோம் தேவைப்பட்டால் படைகள் மூலமாக அது நடக்கும் எனக் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என கடந்த மூன்று தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் பையனுடன் தொலைபேசியில் கூறும் போது எச்சரிக்கை விடும் வகையில் பேசினார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டு சுற்றுப்பயணம் அமைகின்றது. இது பற்றி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிவ்வே பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது ஒரே சீனா கொள்கையில் அமெரிக்க தமிழ் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறது. சுதந்திர தைவான் என்பதற்கு அமெரிக்கா ஆதரவு எதுவும் அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். எனினும் அமெரிக்கா அதிபர் பைடனிடம் நிர்வாகமானது ஒரே சீனா கொள்கை மற்றும் சுதந்திரம் மற்றும் வெளிப்படையான இந்தோ பசுபிக் பகுதிக்கான ஆதரவில் தெளிவான நிலைப்பாடு கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். நான்சி பெலோசி தைப்பே நகரில் இன்று இரவு தங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது என தைவான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் எனினும் பெலோசி தைவான் நாட்டிற்கு எப்போது சென்று சேருவார் என தெளிவாக தெரியவில்லை.