Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டான்..! இதுதான் ஒரே வழி… மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல்லில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சந்தமநாயக்கன்பட்டி காந்திநகரில் சவுந்திர பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேடசந்தூர் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் 11 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது வேடசந்தூர் காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவரை காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அதன்பின் சிறைச்சாலையில் அடைத்தனர்.

மேலும் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் சவுந்திரபாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |