விழுப்புரம் மாவட்டம் கொளப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் ஜான்சி ராணி. இவர் பழைய கருவாச்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே ஜான்சி ராணிக்கு 17 வயதாக இருக்கும் பொழுது கிளின்டன் என்பவரோடு அவருடைய குடும்பத்தார் கட்டாய கல்யாணம் செய்து வைத்தனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த ஜான்சி ராணி கடந்த 18ஆம் தேதி அன்று தன்னுடைய காதலனான ஞானமுத்து வீட்டிற்கு சென்று அவரோடு வாழ்ந்து வந்துள்ளார்.
பின்னர் இந்த விவகாரம் குறித்து கிளிண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காதல் திருமணம் செய்து கொண்ட ஜான்சி ராணி தனக்கும் தன்னுடைய காதல் கணவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பின்னர் குழந்தை திருமணம் செய்த பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.