Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்….? மாணவி எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஸ்வநத்தம் புதூரில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவேணி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் பூவேணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |