Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? மருத்துவ கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அடைக்கம்பட்டி கிராமத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வர்ஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மதுரையில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வர்ஷா திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வர்ஷா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |